torsdag 2. juni 2011

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!!

அன்புடையீர்!

வணக்கம்! 'ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு (Tamils for Obama)' என்ற
உலகப்புகழ் பெற்ற அமைப்பு, தமிழீழம் வேண்டுமா இல்லையா என ஈழத்
தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்தக் கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு
விண்ணப்பம் அனுப்புகிறது. உலகெங்கும் உள்ள மக்கள் இதில் கையெழுத்திட
வேண்டும் என்பது அந்த அமைப்பின் வேண்டுகோள். கவனிக்க! ஈழத்
தமிழர்களுக்காக நடத்தப்படும் எத்தனையோ கையெழுத்து இயக்கங்களைப் போல்,
பத்தோடு பதினொன்றாக இதைக் கருத வேண்டாம்! அமெரிக்க அதிபரின் பெயரால்
நடத்தப்படும் உலகளாவிய ஓர் அமைப்பால் ஈழத் தமிழர்களுக்காகச்
முன்னெடுக்கப்படும் மிக முக்கியமான, சக்தி வாய்ந்த ஒரு கையெழுத்து
இயக்கம் இது! எனவே அருள் கூர்ந்து கையெழுத்திடுங்கள்! தமிழர் தனிநாடு மலர
உதவுங்கள்! ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!!

கையெழுத்திடக் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்குங்கள்!
http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp

நீங்கள் கையெழுத்திட்ட பின் இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும்
அனுப்பி அவர்களையும் இதில் கையெழுத்திடச் செய்யுங்கள்!

மிக்க நன்றி! வணக்கம்!

அன்புடன்:
இ.பு.ஞானப்பிரகாசன்.