torsdag 20. september 2012

சீமானின் பதில் என்ன?

பொன்ராசு தமிழ்செல்வனின் இந்த கடிதத்திற்கு சீமானின் பதில் என்ன?

மதிப்பிற்குரிய அண்ணன் சீமானுக்கு பகிரங்க கடிதம்,
உங்கள் மீது மிகவும் மரியாதை வைத்து நீங்கள் சொல்லுவதையெல்லாம் அப்படியே வேத வாக்காக ஏற்றுக்கொண்டு செயல்ப்பட்ட உங்கள் தம்பிகளில் ஒருவன் எழுதுவது.
1. கூடங்குளம் உண்ணாவிரத போராட்டத்தின் பொழுது பேசிய நீங்கள் உங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் 5000 தொண்டர்களோடு அணிவகுத்து 
நிற்பேன் என்று சொன்னீர்களே, ஆனால் 10.09.2012 அன்று நடந்த களபோரில் ஏன் அண்ணன் உதயகுமாரோடு
பங்கேற்க்க வில்லை.
2. துரோகி கருநாய் நிதி மற்றும் தமிழின துரோகி இந்திய போர் குற்றவாளி காங்கிரஸ் இந்த ஒட்டு பொரிக்கிகளை எதிர்கின்ற நீங்கள் தமிழின துரோகி பாசிச ஜெயா வை விமர்சிக்க தயங்குவது ஏன்?
3. கூடங்குளத்தில் இறந்த போராளிகளுக்கு அஞ்சலி என்ற பெயரில் நீங்கள் போராட்டத்தில் (10.09.2012) நேரடியாக பங்கேற்காமல் அஞ்சலிக்கூட்டதில் அரசியல் செய்வது ஏன்?
4. பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு அகதிகள் முகாம்களை இழுத்து முட கோரி நீங்கள் நடத்திய போராட்டதின் விளைவாக பாசிச ஜெயா இன்னும் முகாம்களை முடாமல் இருப்பது குறித்து அமைதி காப்பது ஏன்?
5. இந்தியா வருகின்ற போர் குற்றவாளி பிணம் தின்னி வேசி மகன் ராஜ பக்சே வை திரு வைகோ ராஞ்சியில் போய் எதிர்ப்பு தெரிவிப்பது போல் செய்யாமல் இங்கே ரயில் மறியல் கடை அடைப்பு என்ற வெற்று போராட்டங்களை நடத்துவது ஏன்?
6. கூடங்குளம் போராட்டம் மற்றும் ஈழ தமிழர் படுகொலைக்கு நியாம் கேட்டு இங்கு இருக்கிற காங்கிரஸ் தறுதலைகளின் (தலைவர்கள்) வீடுகளையும் டெல்லியிருந்து வருகின்ற தலைமை தறுதலைகளையும் முற்றுகையிட்டு போராடாமல் இருப்பது ஏன்?
7. எந்த போராட்டம் ஆனாலும் ஏதாவது உயிர் பலிகள் நடந்த பிறகுதான் அடையாள போராட்டங்களை நடத்துவீர்களா..
இந்த கடிதத்தை எழுதுவதால் என்னை கரு நாய் நிதியின் கைகூலி என்றோ எண்ண வேண்டாம் நான் சொல்ல வருகின்ற ஆதங்கத்தை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்…….
உங்கள் தம்பி.
பொன்ராசு தமிழ்செல்வன்.
18/09/2012