søndag 18. november 2012

முருகதாஸ் அண்ணே




முருகதாஸ் அண்ணே,

சென்ற படத்தில் ஒரு பொது எதிரி தேவைப்பட ஒரு சீனாக்காரனை எதிரியாய் காண்பித்தீர்கள்.. இப்போது, இங்கு தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை..
சீனாக்காரனை விட்டு விடுவோம், அவனுக்கும் நமக்கும் எந்த உறவும் இல்லை ஆனால் நமது பூர்வகுடியான இஸ்லாமியர்கள்??

இங்குள்ள ஊடகங்கள் முதல் ஹிந்துவா அரசியல்வாதிகள் வரை நமக்கான பொது எதிரியாக இஸ்லாமியர்களை உருவாக்க எடுத்திருக்கும் வாக்கியம் தான் 'இஸ்லாமிய பயங்கரவாதம்', படத்தில் வரும் இஸ்லாமியர்கள் அனைவரையும் எதிரியாக சித்தரித்து நீங்களும் அதற்கு ஒத்து ஊதி இருக்கிறீர்கள்... 'ஹிந்துராஜ்ஜியம்' என சமீபகாலமாக முழங்கி அதை குஜராத்தில் செயல்படுத்திப் பார்த்து ஆயிரக்கணக்கில் உயிர்களை காவு வாங்கிய அரக்கர்கள் உங்களுக்கு 'ஸ்லீப்பர் செல்ஸ்' ஆக தெரியவில்லையா?

இன்னொன்று, தேசிய உணர்சிகளை வியாபாரமாக்கியவை அனைத்தும் அர்ஜுன்,விஜயகாந்த் காலத்தோடு போகட்டும்.. இன உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ எதுவானால் அதைவைத்து காசாக்கி மெத்தை வாங்கி தூங்க முயலாதீர்கள்...
மற்றபடி... நீங்கள் ஒரு அற்புதமான 'மசாலா' பட இயக்குனர்...

இப்படிக்கு
சினிமாவால் கெட்டுப் போன இச்சமூகம் உருப்படாதா 
என 
ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு தமிழன்..