søndag 2. oktober 2011

கையெழுத்துகள்

அன்புத் தோழர்களே!

ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து
இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ
விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள்.

ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை
மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது!
எனவே இது கண்டிப்பாக அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு
செல்லப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஆகவே கருணை கூர்ந்து இதில்
கையெழுத்திடுங்கள் நண்பர்களே! வரும் அக்டோபர் 29க்குள் இதில் 5000
கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டாக வேண்டுமாம். எனவே நீங்கள் இதில்
கையெழுத்திடுவதோடு மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தினரின்
கையெழுத்துகளையும் தயவு செய்து சேர்க்கும்படியும், மின்னஞ்சல், பேஸ்புக்,
டுவிட்டர் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்களையும் அவர்களின்
குடும்பத்தினரையும் கூட இதில் கையெழுத்திடச் செய்யும்படியும் அன்போடு
கேட்டுக் கொள்கிறேன்!

கையெழுத்திடச் சொடுக்குக:
https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg

உங்கள்:
--இ.பு.ஞானப்பிரகாசன்.

நாள்: 2.10.2011.